/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற சுக்கு பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற சுக்கு பறிமுதல்
ADDED : ஏப் 17, 2025 02:48 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள சுக்கு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட பொருள்கள் விளைச்சல் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். விலை பல மடங்கு அதிகம் என்பதால் தமிழக கடல் வழியாக இவற்றை கடத்தி செல்கின்றனர்.
மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் கடத்திச் செல்வதாக எஸ்.பி., சந்தீஷ்க்கு தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனிப்பிரிவு எஸ்.ஐ., வடிவேல், போலீசார் பாரதி உள்ளிட்ட பலர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கடற்கரையில் கேட்பாரற்று 5 மூடைகள் கிடந்தன.
இதனை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டதில் 175 கிலோ சுக்கு இருந்தது. இதனை கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 77 ஆயிரம்.