ADDED : மார் 18, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: - திருப்புல்லாணி அருகே சேதுக்கரை செல்லும் வழியில் பாப்பாத்தி காளியம்மன் கோயிலில் மூலவர்கள் பாப்பாத்தி காளியம்மன், மாடசுவாமி, கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் 108 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது. பஜனை, நாமாவளி, கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூஜாரி முருகாண்டி செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.