UPDATED : ஏப் 27, 2026 08:05 PM
ADDED : ஏப் 27, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
கடலாடி: கடலாடியில் முத்தாலம்மன் கோயிலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்க உள்ள திருக்கல்யாண உற்ஸவத்தை முன்னிட்டு ஏப்ரல் 27 மாலை 4:00 முதல் 6:00 மணி வரை சுமங்கலி பூஜை நடந்தது. மூலவர் முத்தாலம்மனுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாங்கல்ய பூஜையில் கலந்து கொண்டனர்.
சக்தி ஸ்தோத்திரம், சகஸ்ரநாமம், நாமாவளி, பஜனை, கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்டவைகள் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூல பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
