sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோடை மழை: மிளகாய் விவசாயிகள் வேதனை

/

கோடை மழை: மிளகாய் விவசாயிகள் வேதனை

கோடை மழை: மிளகாய் விவசாயிகள் வேதனை

கோடை மழை: மிளகாய் விவசாயிகள் வேதனை


ADDED : மார் 21, 2025 06:53 AM

Google News

ADDED : மார் 21, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : கீழக்கரை தாலுகா பி.மோர்க்குளம், களரி, கொம்பூதி, சுமைதாங்கி, மேலமடை, கருக்காத்தி, பனையடியேந்தல், மரியராயபுரம், நல்லிருக்கை, ஆலங்குளம், உத்தரகோசமங்கை, மல்லல் உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது செடிகளில் இருந்து மிளகாய் பழங்களை சேகரிக்கும் வேலையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்ட நிலையில் கோடை மழையின் தாக்கத்தால் சேதத்தை சந்திக்கின்றனர்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கீழக்கரை தாலுகா பொறுப்பாளர்கள் முத்துராமன், பழனிச்சாமி, மயில்வாகனன் கூறியதாவது:

இப்பகுதியில் 5000 எக்டேருக்கு அதிகமாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மிளகாய் பழங்களை சேகரித்து உலர வைத்து வரும் நிலையில் மழையால் விவசாயிகள் பாதிககப்பட்டுள்ளனர்.

மிளகாய் பறிக்கும் விளைநிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் செடிகள் கீழே விழுகிறது. ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளோம். எனவே பாதிப்பை சந்தித்த மிளகாய் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us