/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளையாட்டு அரங்கத்தில்கோடைகால பயிற்சி முகாம்
/
விளையாட்டு அரங்கத்தில்கோடைகால பயிற்சி முகாம்
ADDED : ஏப் 21, 2025 05:41 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் ஏப்.,25 முதல் மே 15 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2025-ம் ஆண்டிற்கான 'கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் “வரும் ஏப்., 25 முதல் மே 15 வரை 21 நாட்களுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடக்கிறது.
தடகளம், ஹாக்கி, டென்னிஸ், இறகுப்பந்து, ஜுடோ மற்றும் இதர விளையாட்டுக்களுக்கு பயிற்சி முகாமில் பங்கேற்றிட, வீரர்கள், வீராங்கணைகளுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது. வீரர்கள் வீராங்கணைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம், ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.