நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி அருகே மலட்டாறு சந்திப்பில் உள்ள பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வக ஆசிரமத்தில் ஞாயிறு ராகுகால பூஜை நடந்தது.
முன்னதாக காலை முதலே ஆசிரமத்தில் குவிந்த பக்தர்களுக்கு நிறுவனர் அழகுதுரை சிங்கம் ஆசி வழங்கினார். மாலை மாரியூர் கடலில் நீராடி அருகில் உள்ள பூவேந்தியநாதர் கோயில் தல விருட்சம் முன்னை மரம், வில்வாகை மரங்கள் கீழே தியானம் செய்தார்.
பின்னர் ஆசிரமம் வந்து ராகுகால பூஜைகளை செய்து பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் கலைமுருகன், ராமையா, ஈஸ்வரபாண்டி செய்திருந்தனர்.