/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
/
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
ADDED : ஆக 05, 2025 04:34 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா சென்று பர்வதம் மண்டகபடியில் எழுந்தருளினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூலை 19ல் ஆடித் திருக்கல்யாணம் கொடி ஏற்றப்பட்டு ஜூலை 30ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடாகி கோயில் நான்கு ரதவீதி, திட்டக்குடி வழியாக வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர்.
பின் மாலை 6:00 மணிக்கு மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்ததும் அங்கிருந்து புறப்பாடாகி கோயிலுக்கு இரவு 11:00 மணிக்கு திரும்பினர்.
சுவாமி, அம்மன் வருகை யொட்டி வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி, அம்மன் வீதி உலா நிகழ்வால் நேற்று முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டு இருந்தது.