/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகாசி விசாக விழாவில் யானை வாகனத்தில் சுவாமி
/
வைகாசி விசாக விழாவில் யானை வாகனத்தில் சுவாமி
ADDED : ஜூன் 05, 2025 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த பழமை வாய்ந்த குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா மே 31ல் துவங்கி ஜூன் 9 வரை நடக்கிறது.
விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சுவாமி, அம்மனுக்கு அபிேஷகம், தீபாராதனையும், மாலையில் யாகபூஜையுடன் உற்ஸவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. விழாவில் நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.