/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம்
/
டி-20 கிரிக்கெட் போட்டி துவக்கம்
ADDED : ஏப் 11, 2025 04:47 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள், போலீசார் நல்லுறவை பேணும் வகையில் டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் போட்டியை துவக்கி வைத்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்து அவரும் வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.
எஸ்.பி., கூறியதாவது:
ஏப்., மே கோடை விடுமுறையில் இளைஞர்களிடையே விளையாட்டு உணர்வை வலுப்படுத்தவும், போலீசார் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக டி-20 கிரிக்கெட் போட்டி 10 நாட்கள் நடக்கிறது. 36 அணிகளில் ராமநாதபுரம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.