sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தமிழக---இலங்கை மீனவர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு முயற்சி

/

தமிழக---இலங்கை மீனவர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு முயற்சி

தமிழக---இலங்கை மீனவர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு முயற்சி

தமிழக---இலங்கை மீனவர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு முயற்சி


ADDED : அக் 13, 2024 07:21 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : தமிழக- இலங்கை மீனவர்களிடையே சமரச பேச்சு வார்த்தைக்கு முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்து நாட்டுடமையாக்குவதும் தொடர் கதையாக நடக்கிறது.

1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள 6 வது விதியின் படி பாராம்பரிய மீன் பிடி உரிமையை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களை இலங்கை மீனவர்கள் எதிர்க்கவில்லை.

விதிகளை மீறி மீன்களின் இனப்பெருக்கத்தை அழிக்கும் வகையில் சட்ட விரோதமாக மீன் பிடி தொழிலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே இலங்கை மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினால் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என இலங்கை மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் நவ.,13 ல் பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ளது.

அதற்கு முன் இரு தரப்பு மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினால் புதிய அரசிடம் மீனவர்கள் கோரிக்கை வைக்க ஏதுவாக இருக்கும்.

இலங்கை யாழ்பாணம், நெடுந்தீவு மீனவர்கள் சங்க தலைவர் அன்னப்பராஜா இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் இரு தரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கான காலம் கனிந்து வருகிறது.

இது தமிழக மீனவர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us