sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் கோரிக்கை மனு

/

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் கோரிக்கை மனு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் கோரிக்கை மனு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் கோரிக்கை மனு


ADDED : பிப் 17, 2024 04:45 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஊரக வளர்ச்சித் துறையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், துாய்மைக் காவலர்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் அலுவலர்கள் பி.டி.ஓ., (கி.ஊ) மலைராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டிய பண்டிகை கால முன்பணம் பெரும்பாலான ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதை விரைவில் வழங்க வேண்டும்.

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளனர். உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் வட்டார தலைவர் சந்தியாகுமேரி, செயலாளார் ஆனந்தி, பொருளாளர் சபிதா உட்பட பெரும்பாலான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us