/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.645 கோடி இலக்கு நிர்ணயம்
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.645 கோடி இலக்கு நிர்ணயம்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.645 கோடி இலக்கு நிர்ணயம்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.645 கோடி இலக்கு நிர்ணயம்
ADDED : செப் 17, 2025 07:37 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8555 குழுக்களுக்கு 2025-26ம் நிதியாண்டில் ரூ.645 கோடி வங்கி கடனாக வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பட்டணம்காத்தான் டி-பிளாக் ரோட்டில் உள்ள தனியார் மகாலில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.முன்னதாக சேலத்தில் நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி காணொளிக்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் 649 மகளிர் குழுக்களுக்கு ரூ.56 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் சுழல் நிதி கடன் திட்ட உதவிகள் மற்றும் 1500 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார்.கலெக்டர் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 8555 குழுக்களுக்கு 2025--26ம் நிதியாண்டிற்கு ரூ.645 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 2864 குழுக்களுக்கு ரூ.237 கோடியே 38 லட்சம் ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், உதவி திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.