sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் ரூ.18,521 கோடி கடன் வழங்க இலக்கு

/

ராமநாதபுரத்தில் ரூ.18,521 கோடி கடன் வழங்க இலக்கு

ராமநாதபுரத்தில் ரூ.18,521 கோடி கடன் வழங்க இலக்கு

ராமநாதபுரத்தில் ரூ.18,521 கோடி கடன் வழங்க இலக்கு


ADDED : ஜூலை 29, 2025 11:01 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 521 கோடி கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கியின் நடப்பு நிதியாண்டிற்கான வங்கிக்கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்வு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

இதில் திட்ட அறிக்கை கையேட்டை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் அன்பரசு பெற்றுக் கொண்டார். நடப்பு நிதி ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 521 கோடி கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதில் வேளாண் துறைக்கு ரூ. 13 ஆயிரத்து 30 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1006.95 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன் ரூ.37.32 கோடி, கல்விக்கடன் ரூ.20.68 கோடி, சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.23 லட்சம், இதர கடன்களுக்கு ரூ.65.4 கோடியும், முன்னுரிமை அல்லாத கடன் ரூ.4354 கோடி வழங்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூ.11,850 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.15,585 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அன்பரசு, ஐ.ஒ.பி., முதுநிலை மண்டல மேலாளர் லஷ்மி நரசிம்ஹன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us