/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாஸ்மாக் தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 11, 2025 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகம் அருகேடாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் மாவட்ட தலைவர் சித்தநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமபாண்டி, அரசு ஊழியர் சங்கம் டாஸ்மாக் பிரிவு மாநிலச் செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.
இதில் பணி நிரந்தம்செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நாம்தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கண்இளங்கோ மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.