நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி; -சாயல்குடி சுயம்புலிங்க நகரில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மூலவர் கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகம் செய்து அலங்கார தீபாராதனை நடந்தது. வெற்றிலை மாலை சாற்றப்பட்டது. பக்தர்கள் பலர் சுவாமிதரிசனம் செய்தனர்.