ADDED : ஏப் 16, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி:சாயல்குடி அருகே எஸ்.எம்.இலந்தைகுளத்தில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்.,15 முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு கோபூஜை, நாடி சந்தனம் உள்ளிட்டவைகளும் கடம் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து காலை 10:30 மணிக்கு சக்தி விநாயகர் கோயில் கோபுர விமான கலசத்தில் உத்தரகோசமங்கை நாகநாதக் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எஸ்.எம்.இலந்தைக்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.