ADDED : மார் 22, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.69 கோடி கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகளை ஊழியர்கள் சேகரித்தனர்.
கல்யாண மண்டபத்தில் காணிக்கைகளை கோயில் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, சிவனடியார்கள் குழுவினர் எண்ணினார்கள்.
இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 69 லட்சத்து 23 ஆயிரத்து 658 ரூபாயும், தங்கம் 68 கிராம், வெள்ளி 6 கிலோ 50 கிராம் காணிக்கையாக கிடைத்தது.