sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு அகாடமி பணிகள் தீவிரம் 2026 ஜன.,க்குள் முடிக்க ஆணையம் திட்டம்

/

சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு அகாடமி பணிகள் தீவிரம் 2026 ஜன.,க்குள் முடிக்க ஆணையம் திட்டம்

சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு அகாடமி பணிகள் தீவிரம் 2026 ஜன.,க்குள் முடிக்க ஆணையம் திட்டம்

சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு அகாடமி பணிகள் தீவிரம் 2026 ஜன.,க்குள் முடிக்க ஆணையம் திட்டம்


ADDED : அக் 17, 2025 11:42 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே பிரப்பன் வலசை கடற்கரையில் சர்வதேச தரத்தில் 7 ஏக்கரில் சர்வதேச நீர்சறுக்கு விளையாட்டு அகாடமி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இப்பணிகளை 2026 ஜனவரிக்குள் முடிக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ., துாரத்தில் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் 2 கி.மீ., நீளத்தில் 150 மீட்டர் அகலத்தில் மணற்பாங்கான அரியமான் கடற்கரை உள்ளது. கரையோரம் சவுக்கு மரங்களால் குளிர்ந்த காற்று வீசுகிறது.

கடலில் 50 அடி துாரம் வரை ஆழம் இருக்காது. படகு சவாரி நடக்கிறது. இதனால் குழந்தைகளுடன் மக்கள் பொழுது போக்க வருகின்றனர். ராமநாதபுரம்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இதனால் அரியமான் அருகே பிரப்பன்வலசையில் 7 ஏக்கரில் சர்வதேச நீர்சறுக்கு விளையாட்டு அகாடமி அமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்தது. மேலும் கடற்கரை மண்ணின் தன்மை, நீரோட்டத்தின் வேகம் ஆகியவற்றையும் அதன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் இப்பகுதி பாய்மர படகு, நீர்சறுக்கு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க உகந்தது என நீர் விளையாட்டு வல்லுனர்களும் அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து பொழுது போக்கிற்காக நீர்விளையாட்டுகளில் ஈடுபட விரும்பும் சுற்றுலாப்பயணிகளை எவ்வாறு கையாள்வது, பல்வேறு நீர் விளையாட்டு திட்டங்கள், பாதுகாப்பு நெறிமுறைகளை வழிவகுத்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

பிப்.,ல் துணை முதல்வர் உதயநிதி பிரப்பன் வலசை கடற்கரையில் அகாடமி அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.

2026 ஜன.,க்குள் கடற்கரையில் ரூ.42 கோடியே 90 லட்சத்தில் சர்வதேச தரத்தில் சர்வதேச நீர் சறுக்கு விளையாட்டு அகாடமி பணிகள் முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அதன்படி பிரப்பன் வலசையில் நிலத்தை அளவீடு செய்து, மரங்களை அகற்ற வனத்துறை அனுமதி பெற்று பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நீர்சறுக்கு மையம் அதிநவீன கட்டமைப்புகளுடன் அமைக்கப்படுகிறது. படகு நிறுத்தும் இடம், கட்டுப்பாட்டு மையம், ஒர்க் ஷாப், உடற்பயிற்சி கூடம், யோகா மையம், பொருட்கள் வைக்கும் அறை, தங்கும் அறை, உணவுக் கூடம் ஆகியவையும் அமைய உள்ளன.

இம்மையத்தில் பாய்மரப் படகு, மாரத்தான் நீச்சல், நீர்சறுக்கு உள்ளிட்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

18 மாதங்களில் அதாவது 2026 ஜன.,க்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்சறுக்கு விளையாட்டு அகாடமி மூலம் தமிழகத்தில் இருந்து நீர் விளையாட்டு வீரர்கள் அதிகளவில் உருவாவர். உலக நாடுகளில் உள்ள நீர்விளையாட்டு வீரர்களும் அதிகளவில் வருவர் என்றனர்.






      Dinamalar
      Follow us