/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாரியூரில் திருவாசகம் முற்றோதல்
/
மாரியூரில் திருவாசகம் முற்றோதல்
ADDED : ஜன 28, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற பூவேந்தியநாதர் சமேத பவளநிற வல்லியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. உற்ஸவ மூர்த்திகள் நடராஜப் பெருமான் சமேத சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் முன்பாக திருவாசகம் முற்றோதல் நடந்தது.
கருணைபுரி கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவாசகம் முற்றோதல் பாடல்களை பாடினர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.

