
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சந்தனக் காப்பு சாற்றப்பட்டு, வடை மாலை அணிவித்து துாப தீப ஆராதனைகள் நடந்தது.
இதேபோல் பரமக்குடி மீனாட்சி அம்மன், ஈஸ்வரன் கோயில், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் உள்ளிட்ட அனைத்து சிவன், முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.