sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வரத்து கால்வாயை சொந்த செலவில் துார்வாரிய சேர்ந்தகோட்டை மக்கள்

/

வரத்து கால்வாயை சொந்த செலவில் துார்வாரிய சேர்ந்தகோட்டை மக்கள்

வரத்து கால்வாயை சொந்த செலவில் துார்வாரிய சேர்ந்தகோட்டை மக்கள்

வரத்து கால்வாயை சொந்த செலவில் துார்வாரிய சேர்ந்தகோட்டை மக்கள்

1


ADDED : ஜன 01, 2025 04:50 AM

Google News

ADDED : ஜன 01, 2025 04:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : அரசை நம்பி இனி பயனில்லை என்ற முடிவால், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்ந்தகோட்டை கிராமத்திற்கு வரும் மழைநீர் வரத்து கால்வாயை, சொந்த செலவில் கிராம மக்களே துார்வாரினர்.

சேர்ந்தகோட்டையில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகும்.

நெல், மிளகாய் உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைவிக்கப்படுகிறது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பேரையூர் கண்மாயில் இருந்து வரத்து கால்வாய் வழியாக 5 கி.மீ., கடந்து வர வேண்டியுள்ளது.

வரத்து கால்வாய் முறையாக பராமரிப்பின்றி பக்கவாட்டு சுவர்கள் இன்றியும், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும் மணல்மேவி இருந்தது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் இன்றி விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மக்கள் விவசாயத்தை கைவிடும் நிலையுள்ளது.

அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

சேர்ந்தகோட்டையில் வரத்து கால்வாய் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. துார்வார வேண்டி பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி, வரத்து கால்வாயை சொந்த செலவிலே துார்வார முடிவு செய்தனர். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு துார்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

வரும் காலங்களில் விவசாயிகளின் நலன் கருதி அதிகாரிகள் முறையாக வரத்து கால்வாய்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us