sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் திட்டம் கிடப்பில்! மண் தரையால் பயிற்சி பெற சிரமப்படும் வீரர்கள்

/

விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் திட்டம் கிடப்பில்! மண் தரையால் பயிற்சி பெற சிரமப்படும் வீரர்கள்

விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் திட்டம் கிடப்பில்! மண் தரையால் பயிற்சி பெற சிரமப்படும் வீரர்கள்

விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் திட்டம் கிடப்பில்! மண் தரையால் பயிற்சி பெற சிரமப்படும் வீரர்கள்


ADDED : செப் 18, 2025 10:57 PM

Google News

ADDED : செப் 18, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் மாநில தேசிய, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஓடு தளம் மண் தரையாக உள்ளதால் இங்கு பயிற்சி எடுக்க வீரர்கள், மாண வர்கள் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக மைதானத்தில் செயற்கை ஓடுதளம் (சிந்தெடிக்) வசதியின்றி, தடகளப் போட்டியில் சாதிக்கும் வீரர், வீரங்கனைகள் மாநில, தேசிய போட்டிகளுக்கு பயிற்சி பெறுவதற்காக வெளியூர்களுக்கு சென்று வர சிரமப்படு கின்றனர். எனவே செயற்கை ஓடுதளம் அமைக்க வேண்டும் என வீரர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூட்டத்தொடரில் விளையாட்டுதுறை மானியக்கோரிக்கையில் ராமநாத புரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ரூ.11 கோடியில் கால்பந்து விளையாட்டு மைதானம், செயற்கை ஓடுதளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எந்தவிதமான நடவடிக்கையும் இன்றி அப்படியே கிடப்பில் உள்ளது.

எனவே 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசு அறிவித்தப்படி செயற்கை ஓடுதளம், கால்பந்து மைதானம் அமைக்கும் பணிகளை நடப்பபு ஆண்டில் துவங்க விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us