/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் கடல் உள் வாங்கியது
/
ராமேஸ்வரத்தில் கடல் உள் வாங்கியது
ADDED : ஜூலை 24, 2025 12:41 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி நின்றன.
கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து சூறாவளியாக வீசுகிறது. இதனால் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடற் பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் 200 மீ.,க்கு கடல் உள் வாங்கியது.
பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தன. சிறிய நண்டுகள், மீன் குஞ்சுகள் ஆங்காங்கே தேங்கிய கடல் நீரில் தத்தளித்து கொண்டிருந்தன. மேலும் கரையில் நிறுத்தி இருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன.
மதியம் 2:00 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த பருவ சீசனில் கடல் உள்வாங்குவதும் சில மணி நேரத்திற்கு பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.