sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பனில் கடல் உள்வாங்கியது படகுகள் தரை தட்டி நின்றன

/

பாம்பனில் கடல் உள்வாங்கியது படகுகள் தரை தட்டி நின்றன

பாம்பனில் கடல் உள்வாங்கியது படகுகள் தரை தட்டி நின்றன

பாம்பனில் கடல் உள்வாங்கியது படகுகள் தரை தட்டி நின்றன


ADDED : ஜன 17, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 17, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியதால் நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றன.

நேற்று காலை பாம்பன் தென் பகுதியில் மீனவர்கள் கிராமமான சின்னபாலம், நடுத்தெரு கடற்கரையில் திடீரென 200 மீ., கடல் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த மணல் பரப்பு வெளியில் தெரிந்தது. கடல் சிப்பிகள், சங்குகள், சிறிய ரக நண்டுகள் கடல் நீரின்றி தத்தளித்துக் கொண்டிருந்தன. 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தரைதட்டி சாய்ந்தன.

நேற்று காலை மீன்பிடிக்க செல்ல தயாரான மீனவர்கள் படகுகள் சாய்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கடலுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர். நீரோட்டம் மாறுபாட்டினால் கடல்நீர் உள்வாங்கியதாகவும், ஜன., முதல் ஏப்., வரை கடல் உள்வாங்குவது சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us