sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காட்சிப்பொருளாகும் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்குது

/

காட்சிப்பொருளாகும் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்குது

காட்சிப்பொருளாகும் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்குது

காட்சிப்பொருளாகும் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டி கிடக்குது


ADDED : மே 22, 2025 11:47 PM

Google News

ADDED : மே 22, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சியில் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய கழிப்பறை வளாகம் 2 ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

களிமண்குண்டு ஊராட்சியில் எஸ்.பி.எம்.ஜி., திட்டத்தில் 2021- - 2022ம் ஆண்டிற்கான 6 கழிப்பறைகள் கொண்ட பொது சுகாதார கழிப்பறை வளாகம் ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. எவ்வித பயன்பாடின்றி பூட்டியே வைத்திருப்பதால் பயன்படுத்த வழி இல்லாத நிலை நிலவுகிறது.

அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:

களிமண்குண்டு கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காகவும் வருகின்றனர். கடற்கரை ஓரத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பறை வளாகம் பயன்பாடின்றி பூட்டப்பட்டுஉள்ளதால் திறந்தவெளியை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே களிமண்குண்டு ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us