ADDED : ஜன 20, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
சாலை அமைத்த சில நாட்களிலேயே ஹைமாஸ் விளக்கு பழுதானதால் அப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது:
கீழக்கரை நகராட்சியில் தரமான உத்தரவாதம் உள்ள பல்புகளை அமைக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் தரமற்ற எல்.இ.டி., பல்புகளால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.
எனவே குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.