ADDED : நவ 12, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் மேடாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 56. இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் கோபாலகிருஷ்ணன் 24, கடந்த மாதம் காதல் பிரச்னையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் நேற்று வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மகன் இறந்த சோகத்தில் இருந்த தந்தையும் தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.