/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வலையில் சிக்கிய ஆமை உயிருடன் விடப்பட்டது
/
வலையில் சிக்கிய ஆமை உயிருடன் விடப்பட்டது
ADDED : பிப் 18, 2025 04:56 AM

திருவாடானை: தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது. தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த ராமகிருஷ்னுக்கு சொந்தமான நாட்டுப்படகில் மூன்று மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 50 கிலோ உள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது.
இது குறித்து மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் ஆமையை உயிருடன் கடலில் விட அறிவுறுத்தினர்.
இதையடுத்து ஆமையை வலையிலிருந்து எடுத்து உயிருடன் கடலில் விட்டனர்.
மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரைக்கு வருவது வழக்கமாக உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி ஆமையை பிடிக்க கூடாது என்பதால் உயிருடன் மீட்டு கடலில் விட்டோம். தற்போது வலையில் சிக்கிய ஆமை சித்தாமை வகையை சேர்ந்தது. ஆமையால் வலை அதிகளவு சேதமடைந்தது என்றனர்.

