/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காரிலிருந்து தவறி விழுந்தவர் பலி
/
காரிலிருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : அக் 28, 2024 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதி முனியசாமி மகன் விக்னேஷ் 24.
இவர் நேற்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த மருதுபாண்டியர் குரு பூஜை விழாவிற்கு காரில் நண்பர்களுடன் சென்றார்.
ராமநாதபுரம் மாடக்கொட்டான் பகுதி கிழக்கு கடற்கரையில் விக்னேஷ் காரிலிருந்து தவறி விழுந்தார். காரில் இருந்தவர்கள் அதனை கவனிக்காமல் சென்றனர். அக்கம்பக்கத்தினர் விக்னேைஷ மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.