ADDED : மே 11, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி; தொண்டி அருகே சம்பை கிராமத்தில் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு மே 2ல் கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது.
முன்னதாக பாதிரியார் விண்ணரசு, செல்வகுமார் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.