sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நிரந்தர செயல் அலுவலர் இல்லை; தொண்டி பேரூராட்சி முடக்கம்

/

நிரந்தர செயல் அலுவலர் இல்லை; தொண்டி பேரூராட்சி முடக்கம்

நிரந்தர செயல் அலுவலர் இல்லை; தொண்டி பேரூராட்சி முடக்கம்

நிரந்தர செயல் அலுவலர் இல்லை; தொண்டி பேரூராட்சி முடக்கம்


ADDED : நவ 30, 2024 06:49 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி; தொண்டி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளது.

தொண்டி பேரூராட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு செயல் அலுவலராக பணியாற்றிய மகாலிங்கம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கவில்லை.

அவ்வப்போது மற்ற பேரூராட்சியில் பணியாற்றுவோர் கூடுதல் பொறுப்பேற்று பணி செய்கின்றனர். ஐந்து மாதத்திற்குள் மூன்று பேர் பணியாற்றியுள்ளனர்.

தற்போது சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி இப்பேரூராட்சியில் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.

நிரந்தர செயல் அலுவலர் நியமிக்காததால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளது. தொண்டி மக்கள் கூறியதாவது:

தற்போது மழைக்காலம் என்பதால் வைரஸ் காய்ச்சல் தொற்று பரவும் நிலையில் பிரதான கழிவு நீர் வாய்க்கால் அடைபட்டு கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் மழை நீரோடு கழிவு நீர் சேர்ந்து தெருக்களில் ஓடுகிறது. பேரூராட்சி மக்கள் அன்றாட பிரச்னைகளை தீர்ப்பதற்காக அலுவலகத்திற்கு சென்றால் செயல் அலுவலர் இல்லை என்று ஊழியர்கள் கூறி விடுகின்றனர்.

இதனால் குறைகளை கூற முடியவில்லை. பிளான் அப்ரூவல் மற்றும் குடிநீர் சம்பந்தமான பிரச்னைகள், திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அனைத்து பணிகளும் அலுவலகம் மூலமாகத்தான் நடக்கின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொண்டி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us