sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு பாட பிரிவிற்கு ஆசிரியர் இல்லை தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்

/

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு பாட பிரிவிற்கு ஆசிரியர் இல்லை தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு பாட பிரிவிற்கு ஆசிரியர் இல்லை தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு பாட பிரிவிற்கு ஆசிரியர் இல்லை தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்


ADDED : ஜூன் 12, 2025 11:08 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி; கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியர் மற்றும் முதுகலைபொருளியல் ஆசிரியர் பணியிடம் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள்செயல்படுகிறது. 600 மாணவர்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து கல்வி பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 33 ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான முதுகலை வணிகவியல் மற்றும் பொருளியல் ஆசிரியர் இரண்டு பணியிடம் காலியாக உள்ளது.

மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

கடந்த ஜூன் 2 முதல் பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளியில் வணிகவியல், பொருளியல்பாடத்திற்கான ஆசிரியர்கள் பணியிடம் அனுமதி இருந்தும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. வரக்கூடிய ஆசிரியர்கள்கலந்தாய்வில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஆசிரியர்கள் இல்லாமல் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. பள்ளியின் தரைத்தளங்கள் சேதமடைந்தும், கழிப்பறை வசதி குறைவாக உள்ளதால் மாணவர்கள்சிரமப்படுகின்றனர். பெரும்பாலான வகுப்பறைகளில் மின்சார வசதி இல்லை.

எனவே குறைகளை நிவர்த்தி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us