sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறிய கண்மாய்களில் தண்ணீர் இல்லை பருவமழை பெய்தும் ஏமாற்றத்தில் விவசாயிகள்

/

சிறிய கண்மாய்களில் தண்ணீர் இல்லை பருவமழை பெய்தும் ஏமாற்றத்தில் விவசாயிகள்

சிறிய கண்மாய்களில் தண்ணீர் இல்லை பருவமழை பெய்தும் ஏமாற்றத்தில் விவசாயிகள்

சிறிய கண்மாய்களில் தண்ணீர் இல்லை பருவமழை பெய்தும் ஏமாற்றத்தில் விவசாயிகள்


ADDED : நவ 07, 2024 01:52 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போதிய பருவமழை இல்லாததால் 50க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களில் தண்ணீரின்றி காலியாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கள் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதியில் போதிய பருவமழை இல்லாததால் 50க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களில் 10 சதவீதம் தண்ணீர் கூட தற்போது இல்லாமல்பெரும்பாலான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் ஒரு அடிக்கும்குறைவான தண்ணீரே உள்ளது.

இந்நிலையில் பெரிய கண்மாயின் கீழ் உள்ள சித்துார்வாடி, வெட்டுக்குளம், கலங்காப்புளி, அழியாதான் மொழி, உப்பூர் உட்பட 50க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களில் தண்ணீர் இல்லை.

கடந்த ஆண்டு இதே நாளில் பெரிய கண்மாய் உட்பட சிறிய கண்மாய்களிலும், 50 சதவீதத்திற்கும்மேல் தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கண்மாய்களில் போதிய தண்ணீர் இல்லாததால் பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us