sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகை மாயம் ஸ்தானிகர் நீதிமன்றத்தில் சரண்

/

திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகை மாயம் ஸ்தானிகர் நீதிமன்றத்தில் சரண்

திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகை மாயம் ஸ்தானிகர் நீதிமன்றத்தில் சரண்

திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகை மாயம் ஸ்தானிகர் நீதிமன்றத்தில் சரண்


ADDED : நவ 06, 2024 02:31 AM

Google News

ADDED : நவ 06, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் :ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான வழக்கில் ஸ்தானிகர் சீனிவாசன் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து போலீசார் தேடிய நிலையில் 2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இக்கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மாயமானது குறித்து திவான் பழனிவேல் பாண்டியன் புகாரில் குற்றப்பிரிவு போலீசார் நகைகளின் பொறுப்பாளரான சீனிவாசன் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர். ஸ்தானிகர் மற்றும் அவருடன் பணியாற்றிய அனைத்து பணியாளர்களிடமும் விசாரணை நடத்தினர்.

சீனிவாசன் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு செய்தார். மனு தள்ளுபடியானது. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் முன் ஜாமின் மனு செய்தார். அவருக்கு நீதிபதி இடைக்கால முன் ஜாமின் வழங்கினார். விசாரணைக்கு ஒத்துழைக்கவும், மோசடி தொடர்பாக சிறப்பு ஆணையம் அமைத்தும் நீதிபதி உத்தரவிட்டார். அதில் சீனிவாசன் 139 கிராம் தங்க நகைகளையும், 498 கிராம் வெள்ளி நகைகளையும் ஒப்படைத்தார். இதுகுறித்து ஆணையம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சீனிவாசனுக்கு வழங்கிய இடைக்கால முன் ஜாமினை ரத்து செய்தது. இரண்டாவது முறையாக சீனிவாசன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் முன் ஜாமின் மனு செய்தார். அம்மனுவும் தள்ளுபடியானது.

சீனிவாசனை கைது செய்ய போலீசார் தேடிய நிலையில் நேற்று ராமநாதபுரம் 2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். மாஜிஸ்திரேட் (பொறுப்பு) வெர்ஜின் வெஸ்டா 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சீனிவாசன் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us