/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கு சீரமைப்பு
/
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கு சீரமைப்பு
ADDED : செப் 27, 2025 11:32 PM

திருவாடானை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானை அருகே திருவெற்றியூர் கண்மாயில் சேதமடைந்த கலுங்கு சீரமைக்கும் பணி துவங்கியது.
திருவெற்றியூரில் பொதுபணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் தேக்கப்படும் நீரால் 450 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 2018ல் குடிமராமத்து செய்யப்பட்டது.
கண்மாயில் நீர் தேங்கும் வகையில் இரண்டு கலுங்குகள் உள்ளன. இதில் சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு பகுதியில் உள்ள கலுங்கு சேதமடைந்து கண்மாய் நீர் வெளியேறியது.
குடிமராமத்து பணியின் போது கலுங்கை முறையாக சீரமைக்கவில்லை. இதனால் கலுங்கு சேத மடைந்து மழை நீர் வெளியேறியது. இச்செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது.
இதன் எதிரொலியாக திருவாடானை பொதுப் பணித்துறை சார்பில் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கலுங்கு சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.