sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா, மான்கொம்பு பறிமுதல் சிறுவன் உட்பட மூவர் கைது

/

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா, மான்கொம்பு பறிமுதல் சிறுவன் உட்பட மூவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா, மான்கொம்பு பறிமுதல் சிறுவன் உட்பட மூவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா, மான்கொம்பு பறிமுதல் சிறுவன் உட்பட மூவர் கைது


ADDED : மே 05, 2025 03:44 AM

Google News

ADDED : மே 05, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா மற்றும் மான்கொம்பை மண்டபம் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ்க்கு கிடைத்த தகவல்படி தனிப்பிரிவு எஸ்.ஐ., வடிவேல், போலீஸ்காரர் பாரதி ஆகியோர் மண்டபம் மரைக்காயர் தெருவில் உள்ள சதாம்உசேன் என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து 12 கிலோ கஞ்சா பார்சல் மற்றும் இரண்டரை அடி நீளமுள்ள மான்கொம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனை பதுக்கி வைத்திருந்த மண்டபத்தைச் சேர்ந்த முகைதீன் வசீர் 21, முகமது கைப் 20 மற்றும் 16 வயதுள்ள சிறுவன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சாவை, மான்கொம்பை கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு உள்ளனர். கஞ்சாவின் மதிப்பு ரூ. 2 லட்சம். மூவர் மீதும் மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை மதுரை மேலுார் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரை ராமநாதபுரம் சிறையிலும் அடைத்தனர். மான்கொம்பை வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேல்விசாரணையில் தேனி, தென்காசி, கோவை காடுகளில் மானை வேட்டையாடி கொம்பை வெட்டி எடுத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இக்கடத்தலில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதால், அவர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us