/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் திருட்டில் டிப்பர் பறிமுதல்: ஒருவர் கைது
/
மணல் திருட்டில் டிப்பர் பறிமுதல்: ஒருவர் கைது
ADDED : டிச 03, 2024 05:23 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் பகுதியில் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட போது டிப்பர் லாரியை ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானுார் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு எஸ்.ஐ., ராமச்சந்திரன், போலீசார் முருகேசன், ஜெயசீலன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்பகுதியில் இருந்து டிப்பர் லாரியில் மணல் ஏற்றி வந்தனர்.
போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். விசாரணையில் மூன்று பேர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. லாரி டிரைவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் திருவாடானை கடம்பாகுடி காளீஸ்வரன் 27, என்பவரை கைது செய்து மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.