/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் புகையிலை பறிமுதல்: இருவர் கைது
/
பரமக்குடியில் புகையிலை பறிமுதல்: இருவர் கைது
ADDED : ஜன 05, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி டவுன் போலீசார் மதுரை -ராமேஸ்வரம் ரோடு பகுதியில் வாகன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் சென்ற முசாபர் கனி தெரு, உதயகுமார் 48, பாசி பவளக்கார தெருவை சேர்ந்த கண்ணன் 57, ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்களிடமிருந்து 145.750 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

