sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கமுதி அருகே சொட்டு நீர் பாசனத்தில் தக்காளி சாகுபடி

/

கமுதி அருகே சொட்டு நீர் பாசனத்தில் தக்காளி சாகுபடி

கமுதி அருகே சொட்டு நீர் பாசனத்தில் தக்காளி சாகுபடி

கமுதி அருகே சொட்டு நீர் பாசனத்தில் தக்காளி சாகுபடி


ADDED : அக் 22, 2024 04:47 AM

Google News

ADDED : அக் 22, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் சொட்டு நீர் பாசனத்தில் விவசாயிகள் தக்காளி விவசாயம் செய்கின்றனர்.

கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் நெல், மிளகாய், வாழை உட்பட சிறுதானிய பயிர்களும் விவசாயம் செய்கின்றனர். இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். கோரைப்பள்ளம் விவசாயி ராமர் கடந்த பல ஆண்டுகளாக இயற்கை முறையில் மிளகாய், பருத்தி, தக்காளி, சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்கிறார்.

தற்போது சொட்டு நீர் பாசனத்தில் தக்காளி விவசாயம் செய்கிறார். விவசாயி ராமர் கூறியதாவது:

கோரைப்பள்ளம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறேன். தற்போது வேளாண் துறை மூலம் 100 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து தக்காளி விவசாயம் செய்கிறேன்.

இதன் மூலம் தேவை இல்லாமல் தண்ணீர் வீணாவதை தடுக்க முடிகிறது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் தக்காளி விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது சொட்டு நீர் பாசனம் உதவியாக உள்ளது. தக்காளி செடியில் காய்ப்பு துவங்கியுள்ளது. சொட்டுநீர் பாசனத்தால் செலவும் குறைந்துள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us