/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை விநாயகர் சதுர்த்தி விழா சுவாமி சிலை விற்பனை ஜோர்
/
நாளை விநாயகர் சதுர்த்தி விழா சுவாமி சிலை விற்பனை ஜோர்
நாளை விநாயகர் சதுர்த்தி விழா சுவாமி சிலை விற்பனை ஜோர்
நாளை விநாயகர் சதுர்த்தி விழா சுவாமி சிலை விற்பனை ஜோர்
ADDED : ஆக 26, 2025 03:31 AM

ராமநாதபுரம்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ரூ.30 முதல் ரூ.500 வரை பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட களிமண், சுடுமண் விநாயகர் சிலைகள் விற்கப் படுகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு அதன் பிறகு கிணறு, ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்படி நாளை (ஆக.,27) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து ராமநாதபுரம் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்தும் வழிபடும் வகையில் மதுரை, மானாமதுரையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத களிமண் சிலைகள், சுட்ட களிமண் சிலைகள் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
அரை அடி முதல் 2 அடி வரை விநாயகர் சிலைகள் ரூ.30 முதல் ரூ.500 வரை விற்கப் படுகிறது.
மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.