sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

/

காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்


ADDED : டிச 02, 2024 04:26 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: புயல் எச்சரிக்கையால் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காட்டில் ஒரு வாரமாக கடலில் படகு சவாரியில் நிறுத்தப்பட்டதால் விடுமுறை தினத்தில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன.

இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டதால் வெளிமாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அவர்களை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டுரசிக்கலாம். விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

கடந்த சில நாட்களாக தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

இந்நிலையில் புயல் எச்சரிக்கையால் நவ.24 முதல் கடந்த ஒரு வாரமாக படகு போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளதால் விடுமுறைநாளில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us