sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காரங்காடு கடலில் படகுசவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

/

காரங்காடு கடலில் படகுசவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

காரங்காடு கடலில் படகுசவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

காரங்காடு கடலில் படகுசவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம்


ADDED : டிச 30, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 30, 2024 08:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையால் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு சுற்றுலா மையத்தில் கடலில் படகு சவாரி செய்வதற்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டதால் ஏராளமான பயணிகள் வருகின்றனர். அவர்களை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன் புயல் எச்சரிக்கையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இந்நிலையில் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையால் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

வனத்துறையினர் கூறியதாவது:

ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. படகுகள் மற்றும் துடுப்புகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us