/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடர் விடுமுறையால் காரங்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்
/
தொடர் விடுமுறையால் காரங்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறையால் காரங்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறையால் காரங்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்
ADDED : செப் 05, 2025 11:21 PM

திருவாடானை: தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள் ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன.
இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப் பட்டதால் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மிலாடிநபி என மூன்று நாட்கள் தொடர் அரசு விடுமுறை என் பதால் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை அதிகரித்தது. படகில் உற்சாகமாக சென்றனர்.