ADDED : மே 05, 2025 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : கோடை விடுமுறையால் காரங்காடு சுற்றுலா மையத்தில் பயணிகள் உற்சாகமாக படகில் சென்றனர். தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டதால் வெளிமாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கோடைவிடுமுறை துவங்கியுள்ளதால் பயணிகள் வருகை அதிகரித்தது. பாதுகாப்பு உடையணிந்து படகில் உற்சாகமாக சென்றனர்.