/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு
/
ரோட்டில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு
ரோட்டில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு
ரோட்டில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : ஜூன் 21, 2025 11:25 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் ரோட்டில் கூட்டமாக திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் பேரூராட்சி காந்தி சிலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட், பஜார் தெரு, அரசு மருத்துவமனை,போலீஸ் ஸ்டேஷன், ஆற்றுப்பாலம் வரை 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ரோட்டோரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அவிழ்த்து விடப்படுவதால் ரோட்டில் சுற்றித் திரிகின்றன.
வாகனங்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது மாடுகள் சண்டையிடுவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இரவில் மின்தடை ஏற்படும் போது ரோட்டில் மாடு இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. உயிர் பலிக்கு முன் ரோட்டில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.