/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அவலம்: மருத்துவமனைகளில் அடிக்கடி பழுதாகும் லிப்டுகளால் நோயாளிகள் அவதி
/
அவலம்: மருத்துவமனைகளில் அடிக்கடி பழுதாகும் லிப்டுகளால் நோயாளிகள் அவதி
அவலம்: மருத்துவமனைகளில் அடிக்கடி பழுதாகும் லிப்டுகளால் நோயாளிகள் அவதி
அவலம்: மருத்துவமனைகளில் அடிக்கடி பழுதாகும் லிப்டுகளால் நோயாளிகள் அவதி
UPDATED : ஜூலை 08, 2025 03:52 AM
ADDED : ஜூலை 07, 2025 11:22 PM

ராமநாதபுரம்,:-ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அடிக்கடி பழுதாகும் லிப்டுகளால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  புதிய கட்டடம் ரூ.154.84 கோடியில் கட்டப்பட்டது.  ஐந்து தளங்கள் உள்ளன. 2023 ஆக.,26 ல் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
முதல் தளத்தில்  அவசர சிகிச்சை பிரிவு, இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கு, தீவிர சிகிச்சை பிரிவு, 3ம் தளத்தில் ஆண், பெண்களுக்கான வார்டுகள், 4 ம் தளத்தில் அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கான வார்டுகள், ஐந்தாம் தளத்தில் அரங்கம் மற்றும் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இதில் நோயாளிகள் அனைவரும் சிகிச்சைக்கு செல்வதற்கு லிப்டுகள் மூலம் தான் செல்கின்றனர். எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற காரணங்களுக்காக தரைதளத்திற்கு நோயாளிகள் வர வேண்டிய நிலை உள்ளது. நடக்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளை லிப்டுகளில் மட்டுமே கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.
ஆறு லிப்டுகள் இயங்கினாலும் டாக்டர்கள், அலுவலர்களுக்கு என இரண்டு லிப்டுகள் இயக்கப்படுகின்றன.
மற்ற நான்கும் நோயாளிகளுக்காக இயக்கப்படுகின்றன. இதில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு நான்கு லிப்டுகளும் பழுதடைந்ததால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். இது போன்ற நேரங்களில் வீல் சேர்களில் நோயாளிகள் சறுக்குப்பாதை வழியாக கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் இப்பாதையை பயன்படுத்த தயங்குகின்றனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் முறையாக லிப்டுகளை உரிய நேரத்தில் பராமரிப்பு பணிகளை செய்தால் பழுது ஏற்படாமல் இருக்கும்.
இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

