ADDED : ஜன 20, 2026 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே கோட்டைமேட்டில் இயங்கும் சேதுசீமை இயற்கை விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
சேதுசீமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் நித்தியா முன்னிலை வகித்தார். அப்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள், இயக்குநர்களின் பொறுப்பு இதன் மூலம் விவசாயிகளின் பயன்கள் குறித்து விளக்கினர். விவசாயிகள் பங்கேற்றனர்.

