/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை கடற்கரையில் வசதிகளின்றி பயணிகள் அவதி: கழிப்பறை, நிழற்குடை அமைக்கப்படுமா
/
கீழக்கரை கடற்கரையில் வசதிகளின்றி பயணிகள் அவதி: கழிப்பறை, நிழற்குடை அமைக்கப்படுமா
கீழக்கரை கடற்கரையில் வசதிகளின்றி பயணிகள் அவதி: கழிப்பறை, நிழற்குடை அமைக்கப்படுமா
கீழக்கரை கடற்கரையில் வசதிகளின்றி பயணிகள் அவதி: கழிப்பறை, நிழற்குடை அமைக்கப்படுமா
ADDED : அக் 26, 2024 05:01 AM

கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையின் இயற்கை அழகை ரசிப்பதற்காக வெளிமாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
கீழக்கரை நுழைவாயில்பகுதியில் வாகன வரியாக ரூ. 30 முதல் 50 வரைநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடற்கரையில் வெயிலுக்காக நிழலில் ஒதுங்குவதற்கோ, நிழற்குடையில் அமர்வதற்கு இருக்கை, அவசர தேவைக்கான கழிப்பறை வசதிகளும் இல்லை.
கீழக்கரை பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் காலை மற்றும் மாலை நேரங்களில் பொழுது போக்குவதற்காக கடற்கரைக்கு குவிகின்றனர்.
கீழக்கரை டூரிசம் சுற்றுலா நிறுவன உரிமையாளர் முகமது ரபீக் கூறியதாவது:
பொதுமக்கள் அதிகம் வரும் கீழக்கரை கடற்கரை பகுதியில் நடை பயிற்சி செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் இன்டெர்லாக் கற்களாலான நடைபாதையும் அமைக்கப்பட்டது.
சமீபத்தில் தன்னார்வலர்கள் மற்றும் கீழக்கரை டூரிசம் சுற்றுலா நிறுவனம் சார்பில் கடற்கரை ஒட்டி உள்ள தார் சாலையில் தேங்கி இருந்த மணலை அகற்றி கொடுத்துள்ளனர்.
மாலைப்பொழுதில் விளையாடி மகிழக்கூடிய சிறுவர்களுக்கான இடங்களில் பழுதான நிலையில் பல மாதங்களாக நாட்டுப் படகுகள் நீண்ட வரிசையில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மணற்பரப்பு முழுவதும் இட நெருக்கடிஏற்படுகிறது. பொதுமக்கள் அப்பகுதியை பயன்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
கடற்கரை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தை காண்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். மன்னார் வளைகுடா கடற்கரையோர சுற்றுலாத்தலமாக உள்ள பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்துதர வேண்டும் என்றார்.