ADDED : ஜன 24, 2026 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பால்கரை கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வள்ளி ஜோதிட அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் மரக்கன்றுகள் வழங்கியும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடந்தது. வள்ளி ஜோதிடம் அறக்கட்டளை நிறுவனர் தனசேகரன் தலைமை வகித்தார்.
தலைமை ஆலோசகர் முருகேசன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சுதாமதி, ஆசிரியர் கிருபாகரன் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். மரம் நடுவதின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

