/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தார்பாயால் மூடி செல்லும் லாரிகள்
/
தார்பாயால் மூடி செல்லும் லாரிகள்
ADDED : ஜூலை 12, 2025 04:56 AM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார், கமுதி பகுதியில் எம். சாண்ட், சவடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகளில் தார்ப்பாய் மூடி கொண்டு செல்கின்றனர்.
அருப்புக்கோட்டை, கமுதி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் எம்.சாண்ட், சவடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கட்டுமான பணிகளுக்காகவும் ரோடு பணிகளுக்காகவும் செல்கிறது.
சிலர் மண் ஏற்றி செல்லும் லாரிகளில் தார்ப்பாய் போட்டு மூடாமல் வருகின்றனர். இதனால் காற்று வீசும் போது லாரியில் இருந்து துாசி பின்னால் வரும் வாகனங்கள் மீதும் ரோட்டிலும் சிதறி விழுகின்றன. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக தற்போது மணல் ஏற்றி வரும் ஏராளமான லாரிகளில் தார்ப்பாயால் மூடப்பட்டு கொண்டு வரப்படுகின்றன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருசில லாரிகள் மட்டும் மூடப்படாமல் கொண்டு வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.